Monday 11 March 2019

கம்போடியா- இரண்டாம் நாள்!!

காலை 9 மணியளவில் உல‌கின் மிகப்பெரிய கோவிலுக்கு இன்று கிளம்பினோம். நகரத்திற்கு வெளியே எல்லா கோவில்களுக்குமான டிக்கட் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு சென்று டிக்கட் வாங்கினார் எங்கள் கம்போடிய வழிகாட்டி. நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு மாபெரும் கோவில்.


from the net
நகரத்திற்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய  கோயிலானது, உலகிலுள்ள மிகப்பெரிய அதிசயமாக காட்சி தருகின்றது. அதன் பெய‌ர்
அங்கோர் வாட் கோயில்



அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.

அங்கோர் வாட் கோயில்  உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் . உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.


தொடர் சிதைவுகள், அழிவுகள், போராட்டங்கள், போர்கள், மாறுபட்ட கலாச்சாரங்கள் காரணமாக நெடுங்காலமாக  காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கூர் வாட் கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது.



கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்த பல வருடங்கள் பிடித்தள்ளன. இதை முழுவதுமாய் வெளிக்கொணர்ந்ததில் அமெரிக்காவின் ' நாஸா' வின் பங்களிப்பு முக்கியமானது.  தமிழ் கலாசாரம் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்ததற்கான சான்றாக இந்த கோயில் இடம் பெறுகிறது.

எங்கள் வழிகாட்டி வெய்யில் தாங்காமல் துண்டை தலையில் போர்த்திக்கொண்டு நடக்கிறார்!!
இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது.





பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த விஷ்ணு கோவில் புத்த கோவிலாக மாறியது. இப்போதும் இந்தக் கோவிலில் மூர்த்தங்கள் இல்லாததால் வழிபாடுகளும் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேன் இல்லை, லாரிகள் இல்லை, அதிநவீன சாதனங்கள் இல்லை, இப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க, அந்தத் தலைமுறை மக்கள் தன் நேரம் முழுவதையும் இதற்கே செலவு செய்திருக்க வேண்டும்...!















தற்போதைய புத்தர் வழிபாடு!

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்ற‌ இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது.






இங்கு கிடைக்கும் இளநீர்! மிகப்பெரிய, வட்ட வடிவ இளநீர்! எங்கள் இரண்டு பேராலும் முழுவதுமாக குடிக்க முடியவில்லை!!
1.5 கிலோமீட்டர் நீளமும் 1.3 கிலோமீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான அகழி பார்ப்பதற்கே பிரமிப்பூட்டுவதாக இருந்தது. மூன்று தளங்களுடன் அறுபது மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை தூரத்திலிருந்தே காண முடிந்தது. கோயிலின் நுழைவாயிலில் சுமார் 800 மீட்டர் நீளத்தில் செதுக்கப்பட்டிருந்த பல்வேறு  சிற்பங்கள் இக்கோயிலின் அழகிற்கு அழகு சேர்த்தன. இடது பக்கம் அசுரர்களும் வலது பக்கம் தேவர்களும் கூடிநின்று பாற்கடலைக் கடைவதையும்,  தத்ரூபமாக செதுக்கியுள்ளனர்.

This is motor cycle rickshaw!!
பிரதான கோபுரத்தை அடைவதற்கு நீண்ட தாழ்வாரத்தையும் குறுகலான படிகளையும் கடக்க வேண்டியிருந்தது. இக்கோயிலின் சுவர்கள், தூண்கள், நடைபாதைகள், மேல்தளங்கள் என எங்கு பார்த்தாலும் சிற்பங்களே. இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.

வருத்தமான விஷயம் நிறைய இடங்களில் காணப்பட்ட சிதைவுகள் தான். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேன்டிய இந்தக் கோவில்கள் பின்னால் வந்த‌ மன்னர்களால் கவனிக்கப்படவில்லை. அதோடு சில கொடுங்கோல் ஆட்சியளார்களால்தான் நிறைய சிற்பங்கள், கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன.

குறிப்பு:


இந்த அங்கோர் வாட் கோவிலைக்காண ஒரு முழு நாள் வேண்டும். நாம் பயணத்திட்டங்களில் விவரம் புரியாது சுற்றுலா நிறுவன‌ங்கள் போட்டுக்கொடுத்த திட்டங்களை அப்படியே ஏற்கிறோம். ஒரு நாளைக்கு 4 கோவில்கள் என்பது சரியானது தானா என்பதை நாங்களும் யோசிக்கவில்லை. ஆனால் நேரடி அனுபவம் வேறு. இந்த அங்கோர் கோவிலுக்கு மட்டும் ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. ஏனெனில் கோவிலை அடையவே பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அடிக்க‌டி படிகள் ஏற வேன்டும். அதனால் காலை 7 மணிக்கே  சென்றடைவது நல்லது. அப்போது தான் சுட்டுப்பொசுக்கும் வெய்யிலிடமிருந்து ஓரளவாவது தப்பிக்க முடியும்!

இந்த அங்கோர் வாட் கோவிலின் முழு அழகையும் அதனாலேயே சரியாக பார்க்க முடியவில்லை. அதோடு அதன் முழு விபர்ங்களையும் கையில் வைத்துக்கொண்டு பார்த்தால்தான் சரியாக இருக்கும்!

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

அட்டகாசமான கோயில். என்ன அழகு சிற்பங்கள். வரலாறுகுறித்தும் அறிய முடிந்தது.

உங்கள் படங்களும் சூப்பராக இருக்கிறது மிகவும் ரசித்தோம்.

கம்போடியாவில் வெயில் குறைவு என்பதே ஜஸ்ட் அக்டோபர், நவம்பர் டிசம்பர் அதுவும் 24-26 தான்...ஆனால் அந்தச் சமயத்தில் போயிருந்தால் கொஞ்சம் பரவாயில்லாம இருக்குமோ மனோ அக்கா...

உங்கள் பின் குறிப்பையும் நோட் செய்து கொண்டேன். நீங்கள் விவரித்ததிலிருந்தே இக்கோயிலைப் பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டிவரும் என்று தோன்றியய்து...அதை நீங்களே பின் குறிப்பில் சொல்லிட்டீங்க...

சூப்பர் கம்போடியா தொடரை தொடர்கிறோம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்ற்ன. அழகான கோயில். வரலாற்றில் படித்ததுண்டு. இப்போது உங்கள் பதிவின் மூலம் தகவல்கள் அறிய முடிகிறது.

துளசிதரன்

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு பகுதிகளையும் ஒரு சேர இப்போது தான் படித்தேன்.

ஆஹா.... அற்புதமான ஒரு கோவிலை உங்கள் மூலம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

படங்கள் அனைத்தும் அழகு.

ஸ்ரீராம். said...

இந்தக் கோவில் பற்றி படித்திருக்கிறேன். எவ்வளவு பழமையான, சுவாரஸ்யமான, பிரம்மாண்டமான கோவில். பெரிய கோவிலாக இருந்தாலும் பல இடங்கள் வெற்றிடங்களாக இருக்கின்றன.

உள்ளே இருக்கும் கோவில் கேரளா அரண்மனை போல இருக்கிறது. சுவர்களில் பழமை தெரிகிறது. சுவாரஸ்யமான பதிவு.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியிருக்கிறது
அற்புதமானக் கலைப் படைப்பு

priyasaki said...

அழகான கோவில் புராதன தலம் பற்றிய தகவல்கள் அறியமுடிந்தது. படத்தில் வெயிலின் தாக்கம் தெரிகிறது.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கீதா!

நாங்கள் டிசம்பர் மாதம் 18ந்தேதி, 19, 20 தேதிகளில் தான் கம்போடியாவை சுற்றிப்பார்த்தோம். ரொம்பவும் குளிர் இல்லை. ஆனால் கம்போடியா பூமட்திய ரேகைக்கு வெகு அருகில் இருப்பதால் எப்போதுமே உஷ்ணம் இருந்து கொண்டிருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

வயது, கால் வலி காரணமாக நிறைய தூரம் நடக்கவும் குறுகிய் காலத்தில் எல்லாவற்றையும் பார்க்கவும் முடியவில்லை. இன்னொரு முறை போய் ஆற அமர பார்க்க வேண்டும் என்று தான் தோன்றிக்கொண்டிருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் ரசித்து பதிவுகளை படித்ததற்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப் படித்து பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

திரும்பி வந்த பிறகே மன உந்துதல் காரணமாக கம்போடியா பற்றியும் அதோடு இணைந்த தமிழர்கள் பற்றியும் நிறைய படித்தேன். எத்தனை பெரிய பொக்கிஷங்களைப் பார்த்திருக்கிறோம் என்பது அப்போது தான் நன்றாகவே புரிந்தது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
திரும்பி வந்த பிறகு எனக்குக் கிடைத்த வாய்ப்பு எத்தகையது என்பது முழுமையாகப் புரிந்தது எனக்கு!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒருவர் வாழ்வில் பார்க்கவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயில் இக்கோயில் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. தமிழகத்தில் பல கோயில்களின் அழகினை ரசித்தபோதிலும் இதன்மேல் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. இதனைப் பற்றி வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் நேரில் சென்றுவந்து ஒரு சொற்பொழிவில் பகிர்ந்துகொண்டார். உங்களின் இப்பதிவால் நாங்கள் இன்று பயனுற்றோம். நீங்கள் கூறுவதுபோல முன்கூட்டியே திட்டமிட்டு அதிகமாக நேரத்தை இங்கு செலவழித்தால் இன்னும் பொறுமையாக, நிதானமாக பார்க்கலாம், ரசிக்கலாம். அத்துடன் இறையுணர்வை நன்கு உணரலாம். வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

வ‌ருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
திரு.குடவாயில் பால‌சுப்ரமணியம் அவர்களது பார்வையில் கம்போடியா கோவில்கள் பற்றி அறிந்து கொள்ளும் அவா ஏற்படுகிறது!

முற்றும் அறிந்த அதிரா said...

படங்கள் மிக அழகு, அந்தக் கோயில் என்ன ஒரு சிற்ப வேலைப்பாடு, மிகவும் பழைய காலத்தில் இருந்த நாடுபோலத்தான் தெரியுது.. கோயில் சுறறாடல், பனை மரம் எல்லாமே பார்க்க ஆசையாக இருக்கு.

ராமலக்ஷ்மி said...

ஆம், இது போன்ற இடங்களை முழுமையாக இரசித்திட நிச்சயம் ஒரு நாள் தேவை. உங்கள் பதிவு இனிப் பயணம் செல்லவிருப்பவர்களுக்கு உதவும். படங்களும் பகிர்வும் அருமை.

Anuprem said...

பிரம்மாண்டம் ..படிக்கவும் பார்க்கவும் ...