Showing posts with label ரசித்த முத்துக்கள். Show all posts
Showing posts with label ரசித்த முத்துக்கள். Show all posts

Wednesday, 6 November 2024

குளோபல் வில்லேஜ்-2023-2024!!!

 

குளோபல் வில்லேஜ்

அவர்களுடைய வலைத்தளத்தில் ‘ A WORLD WITHOUT BORDER ‘ என்னும் வாசகம் அமைந்திருக்கும். அது உண்மை தான்! ஒவ்வொரு ஸ்டாலையும் உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களும் ரசித்து அனுபவிப்பதுடன் அந்தந்த நாட்டு பொருள்களையும் வாங்கிச் செல்வார்கள்!!

சென்ற வருடம் வழக்கம்போல அக்டோபரில் குளோபல் வில்லேஜ் திறந்தது. இந்த வருடம் ஏப்ரலில் மூடியது. ஒவ்வொரு வருடமும் 90க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ஸ்டாலை பிரம்மாண்டமாக, அசத்தும் அழகுடன் வடிவமைப்பது வழக்கம். அதே போல ஒவ்வொரு வருடமும் புதுமையான நிகழ்வுகளும் பொழுது போக்கு அம்சங்களும் கூடுதலாய் அமைந்திருக்கும். எப்போதும் இந்திய ஸ்டால் நம் நாட்டின் புகழ் பெற்ற ஏதேனும் கோட்டை  வடிவிலே தான் அமைந்திருக்கும்! இங்கே 200க்கும் மேற்பட்ட உணவகங்கள் பல நாடுகளின் உனவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும். வாருங்கள், ஒவ்வொரு நாட்டையும் பார்க்கலாம்.



இந்தியாவும் லெபனானும் எதிர் எதிரே-நடுவே கால்வாய்



செளதி அரேபியா

ஈரான் ஸ்டாலின் வெளிப்பக்கம்

ஈரான் ஸ்டால் நுழைவாயில்-உள்ளே கடைகள்!!


எகிப்து, பஹ்ரைன், துருக்கி




தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் கால்வாய்களின் இரு புறமும் கடைகளும் கால்வாயிலேயே மிதக்கும் கடைகளும் உண்டு. இங்கும் அதே ஸ்டைலில் floating market அமைத்திருக்கிறார்கள். நுழைவாயிலில் இருக்கும் அலங்காரம் இது!!


மிதக்கும் படகுகளில் பழங்கள், இளநீர், ஸ்நாக்ஸ் வியாபாரம்!!


ரஷ்யா, யூரோப்




அமெரிக்கா, கொரியா


ஒரு பகுதி நாடுகளின் படங்களைத்தான் இத்துடன் இணைத்திருக்கிறேன். இவற்றை பார்த்து, கடப்பதற்கே மூன்று மணி நேரம் ஆனதுடன் உடலும் களைத்து விட்டது. எந்த தடவையுமே அனைத்து நாடுகளையும் பார்த்ததில்லை. அடுத்த குளோபல் வில்லேஜ் தொடங்கி விட்டது. இந்த தடவையாவது நிறைய நாடுகளைப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!!




மலேஷியா, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் நாடுகளை பார்ப்பதற்கு ROAD OF ASIAவில் நுழைய வேண்டும்!!




Thursday, 21 December 2023

முத்துக்குவியல்-70!!

 வாழ்நாள் முழுவதும் பேசவே முடியாதவள்  என்று மருத்துவர்களால் தீர்மானம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தை இன்று உலகிலேயே ஐக்யூ அதிகமான பெண்ணாக உருவாகி பல்வேறு விஞ்ஞானிகள், உலகின் புகழ்பெற்ற மகத்தானவர்கள் முன் 15 வயதிலேயே உரையாற்றி, 23 வயதில் இன்று மகத்தான சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி இதோ:

சாதனை முத்து:

இளம் வயதிலேயே தன் அறிவுக்கூர்மையால் பல சாதனை நிகழ்த்தி வருபவர் விலாசினி. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமாரசாமி, சேது ராகமாலிகா ஆகியோரைப்பெற்றோராக கொண்ட விலாசினி பிறந்த போது குறை மாதக் குழந்தை. பேசவே என்றும் முடியாது, 30 நாட்கள் கூட வாழ இயலாவர் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.

பிறந்த 41வது நாளிலிருந்து தினமும் 20 மணி நேரம் தனது தாயிடம் பேசுவதற்காக பயிற்சி பெற்று, ஒன்பதாவது மாதத்திலேயே பேசத்தொடங்கியவர். இரண்டரை வயதிலேயே மேடையேறி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்.

சராசரி மனிதர்களுக்கான நுண்ணறிவுத்திறன். ஐக்யூ லெவல் 90 முதல் 110 வரை இருக்கும். விசாலினிக்கோ ஐக்யூ லெவல் 225. இது உலகிலேயே அதிகம்.



தொடக்கப்பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை ஒரே கல்வியாண்டில் முடித்து அடுத்த வருடம் மூன்றாம், நான்காம் வகுப்புகளை அதே ஆண்டிலேயே முடித்தார். எட்டாவது வகுப்பு முடித்த நிலையில் சிறப்பு அனுமதியோடு விருதுநகர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கணினி அறிவியலில் சேர்ந்து நான்காண்டு படிப்பை மூன்று ஆண்டுகளிலேயே முடித்து 96 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றார். அமெரிக்க முன்னணி நிறுவனமான சிட்கோவின் சி.சி.என்.ஏ தேர்வில் 12 வயது பாகிஸ்தான் மாணவி இர்டிஸா ஹைதரை தன் 10வது வயதிலேயே முறியடித்தார். பி.டெக் முடித்த பின் பல நாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் வந்த போதிலும் உலகின் முன்னணி பல்கலைக்கழங்களிடமிருந்து மிக அதிக கல்வித்தொகையுடன் மேற்படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் வந்தும் இவர் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே இரண்டாண்டு எம்.டெக் படிப்பை 98 சதவிகிதம் பெற்று ஒன்றரை ஆண்டுகளிலேயே மீண்டும் முதல் மாணவியாக தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். 

தற்போது செயற்கை நுண்ணறிவுத்துறையில் பி.எச்.டி படிப்பிற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

15 வயதிலேயே இவரின் திறமையை வியந்து இந்திய வெண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவில் உரையாற்ற அழைப்பு விடுத்தது. இஸ்ரோ இயக்குனர் தலைமையில் 700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் இவர் ' புதிய தகவல் தொழில் நுட்பங்கள்' குறித்து விரிவாக உரையாற்றினார்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 15 வயது மாணவியான விசாலினிக்கு இஸ்ரோ ஒரு ஆராய்ச்சிப்பணியை அவ்ழங்கியது. 2 ஆண்டுக்ளில் முடிக்க வேண்டிய அந்தப்பணியை 35 நாட்களில் முடித்து நாட்டிற்கு சமர்ப்பித்தார்.

இவருக்கு 11 வயதானபோதே 15 சர்வதேச கணினி மாநாடுகளுக்கு தலைமை விருந்தினராஆ அழைக்கப்பட்டு கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங் குறித்து சிறப்புரையாற்றினார்.

தமிழக அரசு நான்காண்டுகளுக்கு முன்பே, 11ம் வகுப்பு ஆங்கிலப்படநூலில் விசாலினியைப்பற்றிய பாடத்தை சேர்த்தது.

பார்வைக்குறைபாடு உள்ள‌ மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியின்றி தாங்களே புத்தகங்களை வாசிக்கும் விதமாக ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். அது விரைவில் உபயோகத்துக்கு வரவுள்ளது.

தற்போது தகவல் தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்னறிவை அடிப்படையாக வைத்து பாதுகாப்பு சார்ந்து சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் இவர். இவரது எதிர்கால இலட்சியம் அறிவியல் துறையில், இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத்தர வேண்டும் என்பதாகும்.

சாதனை முத்து-2

இந்த இதய மருத்துவர் ஆசியாவிலேயே அறுவை சிகிச்சையின்றி வால்வுகளை மாற்றி வைக்கும் திறன் படைத்தவர். இவரின் பேச்சுத்திறனையும் இந்த வீடியோவில் ரசித்த‌போது பிரமித்துப்போனேன். உடலின் பல பாகங்களை இப்படியெல்லாம் இந்த அளவிற்கு ரசனையோடு பேச முடியுமா? மனதில் இவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கினேன்!! கேட்டு ரசித்து அனுபவியுங்கள்!!

இவரைப்பற்றி மேலும் அறிய: https://www.saisatish.com/


Monday, 16 October 2023

சமயங்களும் அன்பும்-பகுதி-2 !!!!!!

 திருவரங்கத்தில் சமய ஒற்றுமை!!

திருவரங்கத்தில் தர்மவர்மனால் ஏற்கெனவே எழுப்பப்பட்ட திருவரங்கனின் முதல் கோயில், காவிரி வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், பின்னர் கிள்ளிவளவனால் புதுப்பிக்கப்பட்டதுதான் இப்போது இருக்கும் திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

ஜடவர்ம சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின், தமிழர் ஆட்சி பல கைகளுக்கு மாறிட,     இறுதியாக முகலாயர்களின் படையெடுப்பு 1310-ம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. டெல்லி சுல்தானின் தலைமைத் தளபதியான மாலிக் காஃபூரின் முரட்டுத்தனமான தாக்குதலில் பாண்டியர்கள் வீழ்ந்து விட, திருவரங்க கோயிலின் கருவூலத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களைக் கைப்பற்றிய மாலிக் காஃபூர்,  தனது வெற்றியின் நினைவாக ஆலய உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலையையும் டெல்லிக்குக் கொண்டு செல்கிறான்.


டெல்லி அரசவையில் அனைவருக்கும் முன்னால், பாண்டிய நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற செல்வத்தை சுல்தானுக்குப் பரிசளிக்கிறான் மாலிக் காஃபூர். அப்போது மாலிக் காஃபூர் கொண்டுவந்த அரங்கன் சிலையும், அதன் முகத்தில் இருந்த வசீகரமான பொலிவும் சுல்தானின் செல்லமகள் சுரதானியை ஈர்க்க, அவள் "வாப்பா... இந்த அழகிய சிலையை நான் வைத்துக் கொள்கிறேன்!" என்று தந்தையிடம் கேட்கிறாள்.

தந்தையும் அதற்கு சம்மதிக்க, அரங்கனின் சிலையை எடுத்துக்கொண்ட சுரதானி, அதைத் தன்னுடனேயே தனது அறையில் வைத்துக் கொள்கிறாள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அரங்கனை சிலையாக இல்லாமல் உயிருள்ளதாகவே கருதுகிறாள் சுரதானி. அத்துடன் அரங்கனின் சிலையை நாளும் குளிப்பாட்டி, ஆடையுடுத்தி, மலர்களால் அலங்கரித்து, உணவு சமர்ப்பித்து என ஒவ்வொரு நாளும் விழித்தது முதல் உறங்கும்வரை கிடைக்கும்போது எல்லாம் அரங்கனுடன் நேரம் செலவிட ஆரம்பிக்கிறாள். மெல்ல, தன்னையறியாமல் அரங்கன் மீது காதலும் கொள்கிறாள்.


அதேசமயம், அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த, திருக்கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. 

இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.

தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற அந்த நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேரும் டில்லி சென்று அரசரை இசையினாலும் நாட்டியத்தினாலும் மகிழ்விக்கிறார்கள். அரசனும் மகிழ்ந்து அவர்களுக்கு அளவற்ற செல்வங்களை வழங்க முடிவெடுக்கும்போது, தங்களுக்கு பொன்னும் பொருளும் வேண்டாம் என்று மறுத்த அவர்கள், அன்று ஏகாதசி என்பதால் தங்களுக்குப் பிடித்தமான அரங்கனின் சிலையைத் தந்தால் மகிழ்வோம் என்று சொல்ல, சுல்தானும் தனது வாக்குத் தவறாமல் இருக்க அதற்கு ஒப்புக்கொள்கிறார். சிலையைக் கொடுக்க சுரதானி ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதால், இளவரசி உறங்கியபின், அவளுக்குத் தெரியாமல் அவர் அரங்கனை எடுத்துக்கொடுக்க, திருவரங்கத்திற்குத் திரும்புகிறது தலைமை பட்டருடன் பயணித்த இசைக்குழு.

காலையில் கண்விழித்த இளவரசி சுரதானி அரங்கன் சிலையைக் காணவில்லை என பதறியழுகிறாள். சிலையை மீட்டுத்தருமாறு தந்தை சுல்தானைக் கேட்கிறாள். ஆனால் சுல்தான் அதை மறுத்துவிட மனமொடிந்த சுரதானி, உண்ணாமல், உறங்காமல், நோய்வாய்ப்பட.. வேறு வழியின்றி அவளையே தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி, திருவரங்கத்திலிருந்து அரங்கனைத் திரும்பவும் எடுத்துவரப் பணிக்கிறார் சுல்தான்!


அதேநேரம், இவர்கள் வரும் தகவலை முன்கூட்டியே அறிந்த திருவரங்கத்தின் தலைமை பட்டர், ஆலயத்திலேயே ஒரு வில்வமரத்தடியில் பத்மாவதித் தாயார் சிலையைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகிறார்.

குதிரையில் பயணித்து திருவரங்கம் வந்துசேர்ந்த சுரதானி, அரங்கன் கோயிலில் உற்சவர் சிலை இல்லாமல் கோயில் மூடியிருப்பதைக் கண்டு, அங்கேயே மயக்கமடைந்து விழுகிறாள். அவள் உடலிலிருந்து ஓர் ஒளி எழுந்து, அரங்கனுடன் சேர்ந்ததைக் கண்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

தங்களது பிரிய இளவரசி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் கொண்ட மாலிக் காஃபூர், கோயிலைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கேயே கொன்றுவிடும்படி உத்தரவிட யுத்தம் அங்கு நடக்கிறது.

ஆனால், உண்மையை உணர்ந்த சுல்தானோ, தனது படையை டெல்லிக்குத் திரும்புமாறு உத்தரவிடுகிறார். மேலும் தனது மகளின் அரங்கன் மீதான அன்பை உணர்ந்த அந்த சுல்தான், அவள் இறந்த அந்த திருவரங்கக் கோயிலுக்கு ஏராளமான செல்வத்தை எழுதியும் வைக்கிறார்.

ஒருநாள், தலைமை பட்டரின் கனவில் தோன்றிய அரங்கன், சுரதானியை தனது மனைவியருள் ஒருவராக ஏற்றுக் கொண்டதை அறிவிக்க, அன்றிலிருந்து அரங்கனின் நாச்சியார்களில் ஒருவராக, 'துலுக்க நாச்சியாராக' பக்தர்களால் சுரதானி ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது.


அரங்கமாநகரின் இதயமாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள்.


மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள்.

இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். 

மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.


திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். 

மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். 

இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். 

சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.

முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். 

அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். 

அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது.

‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு.

எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது.

‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.

மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.

இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.

காதலுக்கும் அன்புக்கும் மதம் என்ற ஒன்று இல்லை என்பதை அரங்கநாதரே அகிலத்துக்கு உறுதி செய்கிறார்.


Wednesday, 18 January 2023

குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!

குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதியில் மீண்டும் புகைப்படங்கள்!



இவர் இபின் பத்தூத்தா.மொரோக்கோ நாட்டின் புகழ் பெற்ற கல்வியாளரும் பயணியுமாவார். இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். முகமது பின் துக்ளக்கின் ஆட்சியில் ஏழு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.



செளதி அரேபியா


ஈரான்



இந்திய அரங்கம். பக்கவாட்டில் குட்டி குட்டி இந்திய உணவகங்கள்...



இந்திய உணவகங்கள்

இந்திய அரங்கத்திற்குள் சர்தார் வல்லபாய் படேல்

இந்திய உணவகங்கள் அருகே இன்னொரு நுழைவாயில்



லெபனான்


பாலஸ்தீனம், லெபனான், கத்தார்

இந்தீய அரங்கத்திற்குள் ஒரு ஓவியம்



இந்திய அரங்கம்


இந்திய அரங்கத்தின் இன்னொரு பக்கம்


சைனாவின் ஒரு பக்கம்-இடது பக்கம் பாலஸ்தீனம்



சைனா


ஓமன் நாட்டின் ஒரு பகுதி





சீன அரங்கத்துக்குள் நடனம்

ஆப்கானிஸ்தான்


ஓமன்

தாய்லாந்து

கொரியா

ஜப்பான்

இரவில் குளோபல் வில்லேஜ்