Friday 30 October 2015

பொன்வரிகள்!!!

சமீபத்தில் சுவாமி சிவானந்தர் சொன்ன சில அறிவுரைகளைப்படிக்க நேர்ந்தது. அவை எல்லாமே பொன்வரிகள் தான். மொத்தத்தில் எல்லா துன்பங்களுக்கும் மனம் தான் காரணம் என்கிறார். யோசனை செய்து பார்க்கையில் அது உண்மை தான் என்று நமக்கும் புரிகிறது. ஆனால் பல சமயங்களில் அறிவை பாசம், அன்பு, அக்கறை போன்ற உணர்வலைக‌ள் ஜெயித்து விடுகின்றன. அப்புறம் அல்லல்களுக்குக் கேட்பானேன்! இதோ அவர் சொன்ன சில அறிவுரைகள்! படித்து ரசியுங்கள்!

மன அமைதி பெற ஸ்ரீ சுவாமி சிவானந்தர் சொன்ன அறிவுரைகள்:

நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் செய்வது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் ஏன் அல்லலுற வேண்டும்?

யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்குத்தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கில்லை. உங்கள் மன அமைதியைப்பாதுகாக்க உங்கள் சொந்த வேலையில் கவ‌னம் செலுத்தினால் மட்டும் போதும்.

பயனுள்ள‌ நன்மை பயக்கும் விஷயத்தை செய்ய நாட்கணக்கில் யோசிக்காதீர்கள். அதிக யோசனை இறுதியில் நல்ல காரியங்களை செய்ய விடாமலேயே தடுத்துவிடும்.

ஆக்கப்பூர்வமான காரியங்களில் இடைவெளி ஏற்படுவது கூட, சில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களைக் கீழே தள்ளி விடும். நேரத்தைப் பொன்போல பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவழியுங்கள்.

நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்க வேன்டாம். மானசீக பிரார்த்தனைகளில், நல்ல நூல்களைப்படிப்பதில் செலவழியுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடுஞ்சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன. எனவே மனதை சுத்தமாக வைத்திருங்கள். வாழ்க்கையென்னும் நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும்.

உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள்.

காரணத்துடன் மட்டுமே பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற‌ பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள். களங்கமற்ற‌ நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றன. 

உங்களிடம் கேட்கப்பட்டாலன்றி எவருக்கும் புத்திமதி சொல்லப்போகாதீர்கள்.

எப்போதும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அது எப்போதுமே உருப்படியான விளைவுகளைத்தராது. மற்ற‌வர்களைப் புண்படுத்துவதுடன் சில சமயங்களில் உறவுகளிடையே தேவையற்ற‌ விவாதம் பிரிவையே உண்டாக்கி விடுகிறது.
 

16 comments:

துரை செல்வராஜூ said...

மனித குலம் அவசியம் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்..

இனிய பதிவு..

இளமதி said...

உண்மையில் பொன்வரிகளேதான் அக்கா!
பேச்சைக் குறைத்தால் பெருகும் நன்மை!

நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள வரிகள்
நன்றி சகோதரியாரே

ஸ்ரீராம். said...

இதில் பல விஷயங்களை நான் பின்பற்றுகிறேன். அருமையான பகிர்வு. இதை காபி செய்து கொள்கிறேன்! வாட்சப்பில் பகிர வசதியாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றும் உண்மைகள் அம்மா...

S.P.SENTHIL KUMAR said...

இன்றைக்கும் பயனுள்ள பொன்மொழிகள். பகிர்ந்தமைக்கு நன்றி!

sury siva said...



//தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள். //

லெஸ் லக்கேஜ் மோர் கம்பர்ட் மேக் டிராவல் எ ப்ளஷர்.

வாழ்வெனும் பயணத்தை குறைந்த சாமான்களுடன் அனுபவித்தால் நிறைந்த சுகம்.

நீங்கள் சொல்வது உண்மையே. பல வீடுகள் ( என்னுடைய இருப்பிடத்தையும் சேர்த்துத்தான்) பல விதமான பொருட்கள் நிறைந்து , ஒரு மளிகைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல் கோ டவுன் மாதிரி தான் இருக்கின்றன.


எதை வைத்துக்கொள்வது, எதை தூர எறிவது என்பதிலேயே காலத்தில் பாதி செலவாகி விடுகிறது.

இந்த உடலை உயிர் தூர எறிந்து செல்லும்போது தான் எதையுமே நாம் எடுத்துச்செல்ல ப்போவதில்லை என்று தெரியுமோ என்னவோ !!

எல்லாம் சரிதான்.

இந்தக் கிழவி எங்கே போனா என்றே தெரியவில்லை.

அடியே !! அந்த மோர்க்குழம்பிலே சேப்பங்கிழங்கை போட்டியா இல்லியா ?

சுப்பு தாத்தா.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகள்! இன்றைக்கு தேவைப்படுவதும் கூட! பகிர்வுக்கு நன்றி!

KILLERGEE Devakottai said...


அனைத்தும் அருமை ஏதோ எனக்கே சொல்வது போன்று தோன்றுகிறது நன்றி பகிர்வுக்கு.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

எல்லாம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

priyasaki said...

அருமையான வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பொன்மொழிகள். நல்லதொரு பகிர்வு மனோக்கா. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே பொன் வரிகள். இவற்றை கடைபிடித்தால் நல்லது....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

பானு said...

அனைத்துமே அருமை அக்கா...

//உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள். //

இது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. பல அர்த்தங்கள் கூறுவது போல் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

Nithyajey said...

அற்புதமான வரிகள் பகிர்தமைக்கு நன்றி ...

Nagendra Bharathi said...

அனைத்தும் அருமை.

ஸ்ரத்தா, ஸபுரி... said...

பொன்மொழிகள் எல்லாமே நன்றாக உள்ளது. கடைப்பிடிக்க முடியாமல் மனசு முரண்டு பண்ணிவருகிறதே.