மிகச் சிறிய வயதிலேயே என் பெற்றோர் எனக்கு கர்நாடக இசையை கற்க வைத்தார்கள். ஆனால் இசையுடன், இசையை விடவும் ஓவியம் வரைவதிலே தான் மனம் ஆழ்ந்து போனது. ஏதாவது காகிதத்தில் வரைந்து பார்க்க முயன்றதெல்லாம் வயது ஏற ஏற வண்ணக்கலவைகளில் மனம் அமிழ்ந்து போக ஆரம்பித்தது. எண்பதுகளில் அனுப்பிய ஓவியங்களை எல்லாம் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன. அப்போது வெளியான பல ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்கு!
![]() |
குங்குமத்தில் வெளி வந்த ஓவியம் இது! |
![]() |
இதுவும் கூட குங்குமத்தில் வெளியானது தான்! |
![]() |
இது மங்கையர் மலரில் வெளியானது! |
![]() |
இது தேவியில் வெளியானது! |
![]() |
என் இளமைக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரு நடராஜன் வரைந்த ஓவியத்தைப்பார்த்து வரைந்தது இது! |