Monday 3 December 2012

காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்!!

என் சகோதரர் அனுப்பிய சில அரிதான புகைப்படங்களைப் பார்த்தபோது இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்ள‌ வேண்டுமென்று தோன்றியது. குறைந்த அளவு வசதிகளும் நுணுக்கங்களும் இருந்த அந்தக் காலத்திலேயே கருப்பு வெள்ளையில் இந்த புகைப்படங்களை எல்லாம் எத்தனை அழகுடனும் திறமையுடனும் எடுத்திருக்கிறார்கள்! நம் நாட்டின் சரித்திரங்களையும் உலக செய்திகளையும் அழகாகச் சொல்லும் இந்தப்புகைப்படங்கள் பிரமிப்பை உண்டாக்கி விட்டன என்று தான் சொல்ல வேன்டும்!!


இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி!
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது
1932 ஆண்டில் மகாத்மா காந்தியும் நேதாஜியும்!
பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லை ஆப்கானிஸ்தான் பார்டர் அருகே!
கல்கத்தாவில் ஹெளரா பாலத்தருகே கல்கத்தா பஸ் ஸ்டேஷன்!
 
1983ல் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்ற பின் இந்திய அணியை இந்திரா காந்தி பாராட்டியபோது!
1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த போது டாக்காவிலிருந்து கல்கத்தா சென்ற‌ கடைசி ரயில்!
ஹிந்தித் திரையுலகின் அன்றைய சூப்பர் ஸ்டார்கள் திலீப் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த்!!
1942ல் உலகப்போர் சமயத்தில் தாஜ்மஹால் மூங்கில், வைக்கோல் புதர்களால் மூடப்பட்டு குண்டுகள் விழாதவாறு இப்படித்தான் பாதுகாக்கப்பட்டது! இந்தப்புகைப்படத்தில் DOME மட்டும் மூடப்பட்டிருக்கிறது. முழுவதும் மூடப்பட்ட தாஜ்மஹாலை படம் எடுக்க அரசு அன்று புகைப்பட நிபுணர்களை அனுமதிக்கவில்லை! அதன் பின்னர், 1971ல் இந்தியா பாகிஸ்தான் போர் சமயத்தில் ஒரு பச்சைத்துணியால் தாஜ்மஹால் போர்த்தப்பட்டது.
 

26 comments:

இளமதி said...

அக்கா...அருமையான பதிவு + படங்கள்.

நீங்கள் சொல்வது உண்மையே. Old Is Gold அல்லவா....

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா..:)

குறையொன்றுமில்லை. said...

எல்லாகருப்பு வெள்ளை படங்களுமே கதை பேசுது. பகிர்வுக்கு நன்றி

Karthikeyan Rajendran said...

மிக அரிய படங்களின் தொகுப்பு அருமை,
இதுபோல படங்கள் இருந்தால் அல்லது கிடைத்தால் தொடர்ந்து பதிவைடவும்

Unknown said...

மிக அரிய படங்களின் தொகுப்பு அருமையாக இருக்கு

ADHI VENKAT said...

அரிய புகைப்படங்கள். ஓடும் ரயிலில் ஏறுவது நேரே நடப்பது போன்று உள்ளது...அற்புதம்....

பகிர்வுக்கு நன்றிம்மா.

Seeni said...

arumaiyaana pakirvu...

வெங்கட் நாகராஜ் said...

அரிய படங்களின் தொகுப்பு...

சிறப்பான படங்கள் பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

ஆஹா சூப்பர்ர் படங்கள்,பகிர்வு நன்றிம்மா...

ஹுஸைனம்மா said...

அபூர்வ படங்கள், அருமை. எப்படிக் கிடைத்தன இப்படங்கள்?

கடைசி கலகத்தா ரயில் மற்றும் தாஜ்மஹால் படங்கள் வியப்பளிக்கின்றன.

RajalakshmiParamasivam said...

அருமையான புகைப்படங்கள்.
black and white புகைப்படங்கள் பார்ப்பதே அரிதாகி விட்ட இந்த காலத்தில் பதிவு கண்ணிற்கு விருந்தாக அமைந்தன.
செய்திகளும் நம்மை பல வருடங்கள் பின்னேஅழைத்துச் சென்றன.

ராஜி

ஸ்ரீராம். said...

சில படங்கள் முகநூலில் பார்த்துள்ளேன். பல படங்கள் புதிது. நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்!! - பாராட்டுக்கள்...

மனோ சாமிநாதன் said...

பாராட்டுடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி இளமதி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் அக்ருத்துக்கும் அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கார்த்திக்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஃபாஸியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சீனி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! சகோதரர் ஹைஷ் தான் எனக்கு அனுப்பியிருந்தார்!

மனோ சாமிநாதன் said...

முதல் அவ்ருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரி ராஜலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி ஸ்ரீராம்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!

Asiya Omar said...

Super Pakirvu.Padangal arumai.

cheena (சீனா) said...

அன்பின் மனோ சாமிநாதன்

அரிய புகைப்படங்களுடன் ஒரு பதிவு - காணக் கிடைக்காத காட்சி = அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா