Thursday 31 December 2015

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப துன்பங்களும் மனக்கவலைகளும் விலகி புத்தாண்டில் அனைவருக்கும் நன்மைகளும் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அனைத்து செல்வங்களும் பல்கிப் பெருக

மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!




புத்தாண்டு தொடங்கிய இந்நாளில் அனைவருக்கும் ஒரு இனிப்பை வழங்குகிறேன். ஒரு மாறுதலுக்கு இந்த முறை ஒரு கேரளாத்து இனிப்பு.

பொதுவாய் கேரள மக்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு நேந்திரம்பழத்தை அவித்து வெல்லம் கலந்து உண்ணக்கொடுப்பார்கள்.



நேந்திரன்பழம் அத்தனை சத்துக்கள் நிறைந்தது. நேந்திரம்பழ சிப்ஸ் அனைவருக்கும் தெரிந்தது தான்.




இந்த நேந்திரம்பழத்தில் குறுக்கே அரிந்து உள்ளே தேங்காய் வெல்லப்பூரணம் வைத்து மைதா மாவுக்கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பது பழம் பொரி என்ற இனிப்பு. இதை பலரும் பலவிதமாகச் செய்வார்கள்.

இப்போது நான் எழுதப்போவது நேந்திரம்பழ அல்வா பற்றி! இந்த அல்வாவின் தனி சிறப்பு இதை செய்த பிறகு ருசிக்கும்போது நேந்திரம்பழத்தினால் செய்தது என்பதை கண்டு பிடிக்க முடியாது என்பது தான். நேந்திரன் பழத்தை உபயோகித்து பலகாரங்கள் செய்யும்போது அவை பதமான பழங்களாக இருக்க வேண்டும் அதிகம் பழுத்திருந்தால் பலகாரங்கள் செய்வது நன்றாக வராது.




நேந்திரம்பழ அல்வா

தேவையானவை:

நேந்திரன் பழம்-           இரண்டு
சீனி-                                   4 மேசைக்கரண்டி
நெய்-                                 4 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல்-   கால் கப்
முந்திரிப்பருப்பு         - 10
ஏலப்பொடி-                    கால் ஸ்பூன்

செய்முறை:

நேந்திரன் பழங்களை தோலுரித்து நீட்ட வாக்கில் இரண்டாக கத்தியால் நறுக்கவும். உள்ளே கறுப்பாக உள்ள பகுதியை நீக்கி விட்டு பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி இந்த பழத்துண்டுகளைப்போட்டு சிறு தீயில் சிறிது நேரம் சமைக்கவும். அவை மசிந்து வரும்போது சீனியை சேர்த்துக் கிளறவும். பழம் நன்கு மசிந்து திரண்டு வரும். தேங்காய்த்துருவலையும் முந்திரிப்பருப்புகளையும் தனித்தனியே நெய்யில் வறுத்துக்கொட்டி, மீதி நெய்யையும் ஏலப்பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். அல்வாப்பதமாகத் திரண்டு வரும்போது தீயை அணைக்கவும். நெய் மணக்க மணக்க சுவையான அல்வா தயார்!!

Sunday 27 December 2015

நலம் காக்கும் முத்திரைகள்!!!-பகுதி-2

அபான வாயு முத்திரை:




ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர, மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும் சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது. 

பலன்கள்:

இந்த முத்திரைக்கு 'மிருத்யுசஞ்சீவினி' என்ற பெயரும் உண்டு. மரணத்தின் பிடிய்லிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால் இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன. ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால்  இரத்தஅழுத்தம் சீராகி விடும்.  மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.


சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:




ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும். மூளையைக் கூர்மையாக்கும். மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்

பலன்கள்:

மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.

பிராண முத்திரை:





மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன் பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்

பலன்கள்:

நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன. நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது.  மூச்சானது சீராகும். அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின் தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது. மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும் கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும். அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.  தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது. வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.

வாத முத்திரை:





ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல் அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள் மீதும் பதிய வேண்டும்.

பலன்கள்:

தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது.  தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும் சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.

வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை:




 சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.

பலன்கள்:

 மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
 கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis),  வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும். நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து, தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான வாயுவை குறைக்கிறது.  மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

சூரிய முத்திரை:





மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும் கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும் இருப்பது சூரிய முத்திரை.

பலன்கள்:

 தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
 உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
பதட்டத்தைப் போக்கும்.  இதில் நெருப்பின் சக்தி அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.
வருண முத்திரை:




கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை சரியாக்குகிறது.

ரத்த அழுத்த சீர் முத்திரை

இரண்டு கைகளிலும் மோதிர மற்றும் நடுவிரல் நுனிகளை உள்ளங்கையில் வைக்கவும் மற்ற விரல்கள் நீட்டியபடி இருக்கவும். இந்த முத்திரை ரத்த அழுத்தத்தை சீரமைக்க உதவுகிறது.

நீர் குறைக்கும் முத்திரை:

சுண்டு விரலின் நுனி கட்டை விரலின் அடிப்பாகத்திலும் கட்டை விரல் சுண்டு விரல் மீதும் பதிய வேண்டும்.

பலன்கள்:

கிளாகோமா கண் நோய் உள்ளவர்களுக்கு இந்த முத்திரை மிகவும் சிறந்தது. கண்ணில் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. அளவுக்கதிகமான வியர்வையையும் குறைக்கின்றது. வயிற்றில் அளவுக்கதிகமாக சுரக்கும் அமிலங்களைக் குறைப்பதால் அசிடிடி குறைந்து, வயிற்றுப்போக்கு முதலிய தொல்லைகள் சரியாகும்.

முதுகு வலிக்கான முத்திரை:

வலது கட்டை விரலின் நுனியுடன் சிறு விரல், நடு விரல்களின் நுனிகள் பொருந்த வேண்டும். அதே சமயம் இடது கை கட்டை விரலின் முதற்கோடு ஆள்காட்டிவிரலின் நகம் மீது பதிய வேன்டும்.

பலன்கள்:

முதுகு வலிக்கான சிறந்த முத்திரை. தண்டுவடத்தின் வழியே செல்லும் நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் வலியை சரி செய்யும்.

நில முத்திரை [ பூமி முத்திரை]:





மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும் சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.

பலன்கள்:

எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும். உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது

Sunday 20 December 2015

நலம் காக்கும் முத்திரைகள்!!!

எல்லோருக்குமே பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றின் சமத்துவமின்மையால்  ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருப்பதற்குத் தியானம் மிகவும் அவசியம்.

நம் கையின் கட்டை விரல்  நெருப்பையும் சுட்டுவிரல்  காற்றையும் நடுவிரல்- ஆகாயத்தையும் மோதிர விரல்  நிலத்தையும் சுண்டு விரல்  நீரையும் குறிக்கின்றன. பல்வேறு முறைகளில் விரல்களை இணைப்பதன் மூலம் பல நோய்கள் குணமாகின்றன என்பது தான் முத்திரைகளின் சிறப்பு!

நம் உடல்நலக்குறைபாடுகளுக்கேற்ப அதற்குப் பொருத்தமான முத்திரைகளை நாம் தினந்தோறும் செய்து வந்தால் நம் உடல்நலக்குறைபாடுகள் படிப்படியாக சரியாகி விடும்.


இந்த முத்திரைகளை பொதுவாய் கிழக்கு நோக்கி அமர்ந்து செய்வது நல்லது. இரு கைகளிலும் செய்ய வேண்டியது அவசியம். டீவி பார்க்கும்போது, நடைப்பயிற்சி செய்யும்போது, யாருடனாவது பேசிக்கொன்டிருக்கும்போது கூட இந்த முத்திரைகளைச் செய்யலாம். இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும் எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

முத்திரைகள் செய்ய வயது வரம்பு கிடையாது. இதற்கு பக்க விளைவுகளும் கிடையாது. தின்மும் உடல் நலத்திற்காக எடுக்க வேன்டிய மாத்திரைகள், மருந்துகள் எப்போதும் போல உட்கொள்ளலாம். தினமும் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.  முதலில் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்து பின் தினமும் 45 நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரைகளை செய்து அனைவரும் என்றும் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன்!!

வலது கை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

பெண்கள் மலர், புத்தகங்கள் என்று இந்த முத்திரைகள் பற்றி நிறைய புத்தகங்களில் படித்திருக்கிறேன். சென்னையில் அக்குபிரஷர் வைத்தியம் பார்த்து வரும் பிரபல மருத்துவர் ஜெயலக்ஷ்மி எழுதிய முத்திரைகள் பற்றிய புத்தகமும் என்னிடம் உள்ளது. ஆனால் அவைகளை செய்து பார்க்க எனக்கு ஆர்வம் இதற்கு முன் வந்ததில்லை. இப்போது தான் இவைகளின் அருமையை அனுபவம் மூலம் உணர முடிந்தது.
  
சமீப காலமாக,  ஒரு மூன்று மாதங்களாக என் வலது கை மணிக்கட்டில் ஒரு பிரச்சினை இருந்து வந்தது. வேலைகள் செய்யும்போது வலது கையை  திடீரென்று திருப்பினாலோ அல்லது மடக்க நேர்ந்தாலோ ஷாக் அடிப்பது போல ஒரு வலி ஏற்பட்டுக்கொண்டிருந்தது.  வலி சற்று அதிகம் என்பதால் மூலிகை எண்ணெய் தடவுவதும் வேறு ஏதேனும் தைலம் தடவுவதுமாக சமாளித்துக்கொண்டிருந்தேன். ஊருக்குத்திரும்பிய பிறகு மருத்துவரிடம் உடனே சென்று கையைக்காண்பிக்க எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் சர்க்கரை நோய் பற்றி தெரிந்து கொள்ள இந்தப்புத்தகத்தை எடுத்து படித்த போது சின் முத்திரையும் அபான முத்திரையும் செய்து வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் மிகவும் குறைந்து விடும் என்று தெரிய வந்தது அதனால் தினமும் நடைப்பயிற்சி செய்யும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் இந்த முத்திரைகளை செய்து வந்தேன். 15 நாட்களுக்குப்பிறகு தான் திடீரென்று கவனித்தேன் என் கையில் அந்த ஷாக் அடிக்கும் வலி இல்லையென்பதை! கையை நன்றாக மடக்கி மடக்கிப் பார்த்தாலும் இப்போது அந்த வலி இல்லை. நான் வேறு எதற்கோ செய்யப்போய் இன்னொரு வலியும் குறைந்ததில் மனம் ஆச்சரியத்தில் மூழ்கியது. இந்த முத்திரைகள் பற்றி நிறைய பேருகுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்!!

முத்திரைகளில் நிறைய வகைகள் இருக்கின்றன. இருப்பினும் சில முக்கிய முத்திரைகள் பற்றி மட்டுமே இங்கே எழுதுகிறேன்.

ஆகாய முத்திரை:




கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனி சேர வேண்டும்.
ஒரு நாளைக்கு, ஒரு தடவைக்கு 4 நிமிடங்கள் என்று மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.  ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.  நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது. ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.

பலன்கள்:

காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும். இதயநோய்,  இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம்  ஆகியவை மட்டுப்படும்.

அபான முத்திரை:




நடு விரல், மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன் பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.

பலன்கள்:

வாயுத்தொல்லை, அஜீரணம், மூட்டு வலி சரியாகும். இது நீரிழிவிற்கு [ சர்க்கரை நோய்க்கு ] மிகவும் சிறந்த முத்திரை. சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும். மலச்சிக்கலை சரியாக்குகிறது.

மேலும் முத்திரைகள் தொடரும்.....!!

Tuesday 15 December 2015

பிரமிக்க வைக்கும் கண்காட்சி -3!!!

சீன அரங்கம்!!


ஜெர்மனி, இத்தாலி அரங்கங்கள்! முன்னால் இருப்பது கப்பல் வடிவிலான ஸ்பெயின் நாட்டு அரங்கம்!


இடையே ஒவ்வொரு நாடும் தங்கள் கொடியைப்பிடித்தவாறே செல்லும் அணிவகுப்பு நடந்தது. அந்தந்த நாட்டு கலாச்சார உடைகளில், நடன‌ங்களில் சிலர் அந்தக்கொடிகளுக்குப்பினால்!!



நம் இந்தியா! பஞ்சாபி நடனம்!!

கோலாட்டம்!!

மிக முக்கியமான இடம்! சாப்பிட அணிவகுத்து வரிசையாக ஒவ்வொரு நாட்டு உணவகங்கள்! நம் சாப்பாட்டிற்கு, இதோ ஹைதராபாத் பிரியாணி!!!
என் பேரன் குறும்புடன் போஸ் கொடுக்கிறார்!!
வெளியே வந்ததும் நுழைவாயிலின் அழகில் சொக்கி, மீண்டும் ஒரு புகைப்படம்!!

Saturday 5 December 2015

பிரமிக்க வைக்கும் கண்காட்சி- பாகம்-2!!!


இந்திய அரங்க்த்தில் அழகிய முகப்பு!!! நுழைவாயில் அருகே யானை!
நம் இந்திய அரங்கத்தினை முழுவதுமாக டிஜிட்டல் காமிராவில் அடக்க முடியவில்லை.
கோட்டை கொத்தளங்களுட்ன் இன்னொரு முகப்பு!


பிரகாசமான ஒளியமைப்பில் இந்தியா!


 
ஆப்பிரிக்க அரங்கம்!!


 
பிலிப்பைன்ஸ் அரங்கம்!!
 
மலேஷியா சிங்கப்பூர் அரங்கம்!!!
மிக அழகிய தாய்லாந்து அரங்கம்!
இராக் அரங்கம்!!
லெபனான் நாடு!
பாலஸ்தீன் நாடு!
எகிப்து நாட்டரங்கம்!!
மிக அழகுடன் சவுதி அரேபியா!!
இரான் அரங்கம்!!
பல வித விளையாட்டுக்கள் ஒளி வெள்ள‌த்தில்!!
ரஷ்ய அரங்கத்தினுள்ளே நடனம்!
தொடரும்!....