Thursday 14 October 2021

முத்துக்குவியல்-64!!

 சாதனை முத்து:

உலக நாடுகளின் நன்மைகளில் பெரும் அக்கறையுடன் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்வேறு கிளை அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. உலகின் நன்மைக்காகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களில் வெற்றி காண்போருக்கு, இந்த அமைப்பு ஆண்டு தோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, இளம் சாதனையாளர்கள், ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுக்கான, ‛உலகின் இளம் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லியில் பள்ளிப் படிப்பையும், பெங்களூரில் பொறியியல் பட்டமும் பெற்ற வித்யுத் மோகன், எரிசக்தித் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது, 29 வயதாகும் இவர், பட்டப்படிப்பு முடித்தது முதலே இத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றியதோடு, அத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். 


பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், அறுவடைக்குப் பின், விவசாயிகள், தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் விவசாயக் கழிவுகளை, பொது வெளியில் எரிப்பதால், தலைநகர் டெல்லி உட்பட, நாட்டின் பல முக்கிய நகரங்களில், காற்று மாசு அதிகரிக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், அக்கழிவுகளை பயன்படுத்தி, எரி சக்திப் பொருட்களை தயாரிக்க வித்யுத் திட்டமிட்டார். அதற்காக, தகாசார் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கினார். பின், விவசாயிகளிடமிருந்து, விவசாயக் கழிவுகளை விலை கொடுத்து வாங்கினார். வித்யுத் மோகன் கண்டுபிடித்துள்ள ஓர் இயந்திரம், நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருள்களைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தையும், கூடுதல் எரிசக்தி தரும் நிலக்கரி போன்ற பொருள்களையும் உருவாக்குகிறது. இவரது இந்த முயற்சியால், விவசாயக்கழிவுள் எரிக்கப்படுவதால் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்பட்டதோடு, இதுவரை வீணாக்கப்பட்டுக் கொண்டிருந்த கழிவுகளுக்கு, விலையும் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதில், ஆக்கப்பூர்வமாக செயல்படும் வித்யுத் மோகனை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, அவருக்கு, 2020ஆம் ஆண்டுக்கான, ‛உலகின் இளம் சாதனையாளர் விருது’ வழங்கியுள்ளது.


பருவ நிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய சர்வதேச விருதான " குழந்தைகளுக்கான பருவ நிலை விருது" பெற்றிருக்கும் திருவண்ணாமலை வினிஷா சர்வதேசப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி. இவர் சொல்கிறார்:

" ஒரு நாள் அம்மாவுடன் நடந்து போய்க்கிட்டிருந்த போது, இஸ்திரி போடும் தாத்தா இஸ்திரிப்பெட்டியில் கரியைப்போட்டு, ஊதி ஊதி புகையால் இருமி சிரமப்பட்டுக்கிட்டுருந்தார். மேலும் பயன்படுத்துற கரியை ரோட்டோரமாக கொட்டுவார். இப்படி இஸ்திரி வண்டியை பயன்படுத்துற எல்லோருமே பயன்படுத்துற கரியை ரோட்டோரமாகவோ, சாக்கடையிலோ கொட்டுறதை பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி எத்தனை கிலோ கரி நம் நாட்டுல எரிக்கப்படுது, அதற்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுது, அது ஏற்படுத்துற சுற்றுச்சூழல் தீங்கு என்று யோசிச்சேன். மின்சாரம் இல்லாமல் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் சோலார் இஸ்திரிப்பெட்டி வண்டியை வடிவமைக்க ஆரம்பிச்சேன். இந்த இஸ்திரிப்பெட்டி உள்ல சைக்கிள் வண்டியின் மேற்புறத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 100 ஹெச் திறன் கொண்ட பாட்டரியை இணைச்சிருக்கிறேன். இந்த பாட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேர சூரிய ஒளி தேவைப்படும். அதன் பிறகு 6 மணி நேரம் இதைத்தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். "

இதற்காக, சுவீடனின் துணைப்பிரதமர் இஸபெல்லா லோவின், ஆன்லைன் விருது நிகழ்ச்சியில் இந்த விருதை வினிஷாவிற்கு வழங்கியிருக்கிறார். விருதுட்ன் பதக்கம், சான்றிதழ், 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அனைத்து வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசால் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கபப்டும் ' பால சக்தி புரஸ்கார்' விருதும் வினிஷாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் ' தானாக இயங்கும் ஸ்மார்ட் மின் விசிறி ' கண்டுபிடிப்பிற்காக ஒரு விருதும் கடந்த ஆண்டு டாக்டர் அப்துல் அக்லாம் இக்னைட் விருதும் பெற்றிருக்கிறார் இவர்!!

பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த இறுதி போட்டி லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வினிஷா உமாசங்கர் மற்றும் வித்யுத் மோகன் இருவரும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது. வித்யுத் மோகனின் படைப்பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது. 

உலக அளவில் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் உயர்ந்த கவுரவமாக கருதப்படும் இந்த விருதை வெல்வதற்காக வினிஷா மற்றும் வித்யுத் ஆகியோருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நாமும் வாழ்த்துவோம்!!!

ஆச்சரிய முத்து:

ஊரிலிருந்து சில மாத இதழ்கள் ஒரு நண்பர் மூலம் வந்திருந்தன. அதில் ' கோகுலம் கதிர் ' என்ற இதழில் என் ஓவியத்தைப் பார்த்தேன். 1984 என்று நினைக்கிறேன், ஆனந்த விகடன் இதழில் ஒரு சிறுகதைக்கு இந்த ஓவியத்தை வெளியிட்டிருந்தார்கள். முப்பத்தியேழு வருடங்கள் கழித்து அதை எங்கிருந்து எடுத்து பிரசுரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. இது தான் அந்த ஓவியம். 


பாதி மட்டும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது!!



8 comments:

ஸ்ரீராம். said...

வித்யுத் மோகன், வினிஷா இருவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.  குறிப்பாக வித்யுத்.  

ஸ்ரீராம். said...

உங்கள் ஓவியம் அழகு.  உங்களிடம் சொல்லாமல், அல்லது ஏற்கெனவே ஒரு இதழில் வெளிவந்ததை  இன்னொரு இதழில் வெளியிடலாமா?  யார் பார்க்கப் போகிறார்கள் என்கிற எண்ணமா?

திண்டுக்கல் தனபாலன் said...

முத்துக்கள் அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

//இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது. வித்யுத் மோகனின் படைப்பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது. //

வித்யுத் மோகன், வினிஷா இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். பரிசுகிடைத்திடவும் வாழ்த்துவோம்.

மனோ அக்கா உங்கள் ஒவியம் மிக மிக அழகு. வாழ்த்துகள். கூடவே, அதெப்படி உங்களைத் தொடர்பு கொள்ளாமல் போடுகிறார்கள்? அதுவும் பல வருடங்களுக்கு முன் வேறொரு இதழில் வந்ததை...மனோ அக்கா இதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினீர்களா?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சகோதரி உங்கள் ஓவியம் மிக அழகாக இருக்கிறது.

வித்யுத் மோகன், வினிஷா இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். வெற்றி பெறவும் வாழ்த்துவோம். மிக நல்ல செய்திப் பகிர்விற்கு மிக்க நன்றி. ஸ்ரீராம்ஜியின் பாசிட்டிவ் செய்தியிலும் இடம் பெறும் என்று நினைக்கிறேன்.

துளசிதரன்

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டுதலுக்கு உரியவர்கள்
பாராட்டுவோம்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வித்யுத் மோகன், வினிஷா இருவரைப் பற்றியும் அறிந்து மகிழ்ந்தேன்..நன்றிமா.உங்கள் ஓவியம் மிக அழகு..

ஸ்ரீராம். said...

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.