Saturday, 17 April 2010

கண்ணாடி ஓவியம்-2

இதுவும் கண்ணாடி ஓவியத்திற்கான கலர்களை வைத்து அவுட்லைன் வரைந்து அதன் பிறகு ஆயில் கலர் போல ஷேட்ஸ் கொடுத்திருக்கிறேன். ஓவியத்தை அரை மணி நேரத்திற்குள் வரைந்து முடித்து விட்டாலும் நகைகள் வரைய நேரம் பிடித்தது.

55 comments:

  1. Superb!

    ///ஓவியத்தை அரை மணி நேரத்திற்குள் வரைந்து முடித்து விட்டாலும் நகைகள் வரைய நேரம் பிடித்தது.///

    ...... இவ்வளவு அருமையாக வரைந்து விட்டு, ஏதோ அரை மணி நேரத்தில் முடித்து விட்டேன் என்று வெகு சாதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள். வாவ்!

    ReplyDelete
  2. மனோ ஆன்டி..ஆல் இன் ஆல் ரவுண்டராக இருக்கின்றிங்க...சூப்பராக இருக்கின்றது ஒவியம்...அருமை..அழகு...

    ReplyDelete
  3. வாவ்வ்வ்வ் மிகவும் அருமையாக இருக்கு,அழகா வரைந்திருக்கிங்க அம்மா...

    ReplyDelete
  4. Mano akka, wow!! very nice work!

    ReplyDelete
  5. ரசித்துப் புகழ்ந்ததற்கு என் அன்பு நன்றி, சித்ரா!

    ReplyDelete
  6. அன்பு கீதா!

    ரசிப்பிற்கும் அன்புப்பதிவிற்கும் என் அன்பு நன்றி!

    ReplyDelete
  7. அன்பு மேனகா!

    உங்கள் பாராட்டு மன நெகிழ்வைத்தந்தது. என் அன்பு நன்றி!

    ReplyDelete
  8. Dear vanathy!

    Thank you very much for the nice words!

    ReplyDelete
  9. அரைமணிநேரத்தில் வரைந்து முடித்தீர்களா?வொண்டர்ஃபுல் அக்கா.படம் தத்ரூபமாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  10. //வியத்தை அரை மணி நேரத்திற்குள் வரைந்து முடித்து விட்டாலும்//

    மிக மிக அருமை

    ReplyDelete
  11. அன்புள்ள ஸாதிகா!

    முதலில் நம் ஓவியத்தை ட்ரேஸ் செய்து அல்லது ஓவியத்தின்மீது கண்ணாடியை வைத்து லைனரால் வரைந்து காய்ந்த பிறகு அதன்மீது இந்த மாதிரி பெயிண்ட் பண்ணி முழுமையான ஓவியமாக்க எனக்கு அரை மணி நேரமே தேவைப்பட்டது. ஆனால் இந்த நகைகள் வரையத்தான் அதிக நேரம் தேவைப்பட்டது.

    பாராட்டுக்கு என் அன்பு நன்றி!

    ReplyDelete
  12. அன்புள்ள LK!

    பாராட்டிற்கும் வருகைக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  13. அற்புதம் அக்கா. ;) உங்கள் இந்த ஓவியத்துக்குக் கருத்துச் சொல்ல முடியுமா என்ன!! வெகு நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்து வரைந்திருக்கிறீர்கள்.
    என் கணனியில் பெருப்பித்து, சேமித்து வைத்துப் பார்த்து ரசிக்கிறேன். ;)

    உங்கள் படைப்புகளை ரசிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் அம்மா இன்றுதான் தங்கள் தளம் காண நேர்ந்தது தங்கள் ஓவியம் அருமையாக இருக்கிறது நான் ஓவியத்தை பார்த்தவுடன் இனையத்தில் எடுத்ததாக இருக்குமென நினைத்தேன் படித்த பின்தான் நீங்கள் வரைந்த ஓவியம் என தெரிந்தது.

    வாழ்த்துகள்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  15. மனோ மேடம்

    இவ்ளோ அருமையான ஓவியத்தை நாங்கள் ரசிக்கவே பாதி நாள் போதாது...

    நீங்க ஜஸ்ட் லைக் தட் சொல்றீங்க பாதி மணித்துளிக்குள் வரைந்தேன் என்று...

    நீங்கள் ஒரு சகலகலாவல்லி மேடம்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. ஓவியம் அற்புதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஓவியம் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அருமை..

    ReplyDelete
  19. அருமையான படம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. ஓவியம் அருமை.இதைப்பார்த்த என் கணவர் தஞ்சாவூர் பெய்ண்டிங்கான்னு கேட்டார்,எனக்கு ஆச்சரியம்,நீங்களும் தஞ்சாவூர் தானே!

    ReplyDelete
  21. அன்புள்ள ஜிஎஸ் ஆர் அவர்களுக்கு!

    தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் என் இதயங்கனிந்த நன்றியையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  22. அன்பு இமா!

    தங்களின் ரசனையான பதிவு கண்டு மகிழ்ந்தேன். வரைவது ஒரு கலை என்றால் அதை ரசிப்பதும் பாராட்டுவதும்கூட சிறந்த கலைகள்தானே?

    ReplyDelete
  23. அன்புள்ள கோபி அவர்களுக்கு!

    தங்களின் மனதிறந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!

    ReplyDelete
  24. அன்புள்ள இர்ஷாத் அவர்களுக்கு!

    தங்களின் பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  25. அன்புள்ள மன்னார்குடி அவர்களுக்கு!

    தங்களின் பாராட்டுப்பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  26. அம்மு மது!

    உங்களுக்கு என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  27. அன்புள்ள குமார் அவர்களுக்கு!

    தங்களின் தொடர் வருகைக்கும் பதிவிற்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றி!!

    ReplyDelete
  28. அன்பு ஆசியா!

    தங்களின் பாராட்டிற்கு என் அன்பு நன்றி! தஞ்சாவூர் பெயிண்டிங்கில் பிரமிக்கத்தக்க அழகு இருக்காது. நுணுக்கங்களும் அலங்காரங்களும் அதிகம் இருக்கும்.
    நானும் தஞ்சாவூர்தான். கலைஞர்களுக்கு பெயர்போன ஊர் தஞ்சாவூர்!

    ReplyDelete
  29. அழகான கண்ணாடி ஓவியம் மனோ அக்கா.இதனை நீங்கள் அரை மணி நேரத்தில் வரைந்ததை நினைத்து ஆச்சரியப் பட்டுப் போனேன். வாழ்த்துக்கள் அக்கா..

    எனக்கு வலைப்பதிவு எதுவும் இல்லை அக்கா.எனக்கு பிடித்த சில வலைப்பதிவுக்கு வந்து வாசிப்பேன்.என்னை அடையாளப்படுத்தும் போட்டோ எனது தங்கை பொண்ணு ப்ரான்ஸ்ல இருக்கிறா...

    ReplyDelete
  30. நல்லா வரைந்துள்ளீர்கள். நல்ல கலைஞானமும். அருளும், இருந்தால்தான் இதுபோல பொறுமையாக வரைய முடியும். ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  31. மிக அழகாக இருக்கிறது சூப்பர்..

    ReplyDelete
  32. You are really an excellent painter and the picture looks great

    ReplyDelete
  33. மனோ அக்கா ரொம்ப அருமையான ஓவியம். மிக அற்புதம்.

    ReplyDelete
  34. நானும் தஞ்சை மாவட்டத்துக்காரந்தான்...

    ReplyDelete
  35. ஓவியம் மிக மிக அருமை

    ReplyDelete
  36. அன்பு ஜெயா!

    அன்பு பதிவிற்கும் பாராட்டிற்கும் என் நன்றி!

    சில பேரை காரணம் தெரியாமலேயே பிடித்துப்போகும்.
    உங்கள் சகோதரி மகள் புகைப்படமும் அப்படி எனக்கு பிடித்துப்போனது. அழகு முகம்-ஒரு கவிதை மாதிரி!

    ReplyDelete
  37. அன்புள்ள பித்தன் அவர்களுக்கு!

    தங்களின் ரசனைக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  38. பாராட்டிற்கு என் அன்பு நன்றி, மலிக்கா!!

    ReplyDelete
  39. Thanks a lot for the appreciation, Krishnaveni!

    ReplyDelete
  40. அன்பான பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி, ஜலீலா!

    ReplyDelete
  41. தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊர், இர்ஷாத்?

    ReplyDelete
  42. அன்பான பதிவிற்கும் பாராட்டிற்கும் என் இதயங்கனிந்த நன்றி, காஞ்சனா!!

    ReplyDelete
  43. ஆஹா! அருமையான ஓவியம் அரை மணி நேரத்திற்குள்!!!!!!!!

    அச்த்தறீங்க!
    தாமதமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    காரணம் மெயிலில் சொல்கிறேன்:-)

    ReplyDelete
  44. பாராட்டிற்கு என் அன்பு நன்றி, செல்வி!

    ReplyDelete
  45. திரும்பவும் உங்க பெயிண்டிங்கை பார்க்க வந்தேன் அப்படியே ஜொலிக்குது.

    ReplyDelete
  46. திரும்பவும் வந்து ரசித்து, பதிவும் எழுதும் உங்களின் ரசனை ஆச்சரியத்தையும் மகிழ்வையும் தருகிறது, ஆசியா!

    ReplyDelete
  47. ரொம்ப சூப்பர் மேடம் , நானெல்லாம் யான வரைய நெனைச்சா அது கடைசீல கொரங்கு மாதிரி இருக்குங்க

    ReplyDelete
  48. பாராட்டிற்கு என் நன்றி மங்குனி அமைச்சர் அவர்களே! அடுத்த வரிகளில் சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள்! இந்த நகைச்சுவைக் கலை எத்தனை கஷ்டமான கலை தெரியுமா? எனக்கு ஓவியம்போல உங்களுக்கு அது அருமையாக வருகிறது!

    ReplyDelete
  49. Dear Mam, you are really rocking..great painting..I just couldn't takeout my eyes from your picture..

    ReplyDelete
  50. Dear Mam, I'm very excited to know from one of your replies to a comment that you are from Tanjore..My Dad hails from there and he was there till his UG..even now, whenever we visit Tanjore he would have some childhood memories related to every place in Tanjore.

    ReplyDelete
  51. மனோ அக்கா, முதலில் பாராட்டு. வைத்த கன் வாங்காமல் நான் அரைமனி நேரம் பார்த்துட்டே இருந்தேன். வர்னிக்க,பாராட்ட வார்த்தக்கள் பத்தாது. எனக்கு பெயிண்டிங்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு அவ்வளவா வராது. எனக்கு பெயிண்டிங் கிடைக்குமா.

    அடுத்தது மன்னிக்கவும். போன வாரம்+அடுத்த வாரம் வரை கொஞ்சம் பிஸி ஆனாலும் உங்களுக்கு மெயில் இன்றோ அல்லது நாளை அவசியம் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  52. Dear Nithu Bala!

    Thanks a lot for the nice compliment!

    Yes, Nithu Bala! My home town is Thanjavur. I am happy to know that yr daddy also hails from there. Every one has sweetest childhood memories. It is not a surprise that yr dad still remembers them whenever he visits his home town. Thanks again for sharing this with me.

    ReplyDelete
  53. ஒவியத்தை இவ்வளவு ரசிக்கிறீர்களே, அது கூட ஒரு பெரிய கலைதான் விஜி! பாராட்டுப்பதிவிற்கு என் அன்பு நன்றி!!
    என்றைக்கு நாம் சந்தித்தாலும் நிச்சயம் என் பெயிண்டிங்க் ஒன்று உங்களுக்குத் தருகிறேன்.
    உங்களின் மெயிலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

    ReplyDelete
  54. அருமையான படம் மனோ ஆன்டி! இந்த படம் பார்த்ததும் ஒரு பாட்டு தான் நினைவுக்கு வருகிறது " ஆடல் கலையே தேவன் தந்தது ....."

    ReplyDelete
  55. அன்பு இலா!

    அருமையாக ரசித்து பதிவெழுதியிருக்கிறீர்கள்! என் அன்பு நன்றி உங்களுக்கு!

    ReplyDelete